கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 16

தீக்குச்சிகளை அடுக்குதல்.

மருந்தில்லாத தீக்குச்சிகளைக் கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு அடுக்கி வடிவங்களை உருவாக்கும் பொழுது, மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும், பொறுமையாக ஒரு செயலைச் செய்து முடிக்கிற ஆற்றலும், வரைதல் திறனும் கிடைக்கும்.

மருந்தில்லாத தீக்குச்சிகள் கிடைக்கவில்லை யென்றால் தென்னை ஈர்க்குகளைக்கூட பயன்படுத்தலாம்.

படகு, வீடு, கொடி என அவர்களுக்குத் தெரிந்து உருவங்களைக் குச்சிகளை அடுக்கி உருவாக்கும் பொழுது மாணவர்கள் மகிழ்வு பெறுவதோடு, புதியன ஆக்குவதற்கான ஊக்கத்தினையும் பெறுகிறார்கள்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278