
பாக்கியம் பிறந்திருக்கிறாள்
ரெ. கார்த்திகேசு
சிறுகதை
பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி
சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை
விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப்
பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல
இஇருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெது
வெதுத்ததை உணர முடிந்தது.
இஇமையிலும் கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இஇளஞ் சிவப்புச் சாயம் பூசினாற்போல் தெரிந்தது.
உடலிலிருந்து பச்சை மண்ணின் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இஇன்னும் இஇருந்தன போலும்.
தலையின் ரோமங்களில் இஇன்னும் கூட பிசுபிசுப்பு. உதடுகள் விரிந்து கொட்டாவி விட்டது ஓர் உலக
அதிசயம் போல் நிகழ்ந்தது. ஒரு சிம்ஃபொனி போல் எங்கள் அனைவரின் வாய்களும் கொஞ்சம்
பிளந்து மூடின.
யார் உருவாக்கினார்கள்? நானா? என்னால் எப்படி முடிந்திருக்கும்? களிமண்ணைப் பிடித்து
ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா? பென்சிலால் நேராகக் கோடு போடத் தெரியாத
நானா?
இஇவளா? இஇதோ தலை முடி கலைந்து சோர்ந்து போய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட
ஆணவத்தில் மருத்துவ மனைக் கட்டிலில் சாய்ந்து கொண்டு விடாமல் புன்னகைத்துக்
கொண்டிருக்கிறாளே, இஇவளா? எப்படி முடிந்திருக்கும்? இஇது என்ன சாம்பார் செய்வது போல ஒரு
கலையா? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ண வண்ணமாக கிராஃபிக்.
வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
நாங்கள் இஇருவரும் சேர்ந்தா? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இஇப்படி ஓர் அற்புதம்? எந்த
இஇரவில் எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும்? ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும்
புனிதமும் புரியாமல் போனது?
"நன்றி வசந்தா!" என்றேன்.
"எதுக்கு?" தெரியாதவள் போல... 'இஇன்னொரு தடவை விளக்கமாகச் சொல்லேன்' என்ற பாசாங்கு.
"இஇந்த அதியசத்துக்குத்தான். எப்படி செஞ்ச?"
"போங்க!" என்று சிரித்துக்கொண்டே கோபித்துக்கொண்டாள். "என்ன பேர் வைக்கலாம்,
சொல்லுங்க...!" என்றாள் தொடர்ந்து, எனக்கும் இஇந்தச் சாதனையில் சிறு பங்கு கொடுப்பவள் போல.
"ஆதி!" என்றேன்.
"ஆதியா? அது என்ன பேர்?"
"நமக்கு முதல் குழந்தை இஇல்லையா, அதனாலதான். அதோட வள்ளுவர் முதல் குறள்ளியே
சொன்னாரில்ல, 'ஆதி பகவன்' அப்படின்னு...."
"ஆமா, இஇப்பிடித்தான் பட்டிக்காடு மாதிரி பேர் வைங்க! எல்லாரும் சிரிப்பாங்க...!" என்றார் அம்மா.
"ஆமாங்க, அப்புறம் ஸ்கூலுக்குப் போம்போது எல்லாரும் கேலி பண்ணுவாங்க! நல்ல மோடர்னா
பேர் வைக்கணும்!" என்றாள் வசந்தா.
"இஇங்க கொண்டா!" என்று குழந்தையை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார் அம்மா. மேலும்
என் கையில் இஇருந்தால் இஇன்னும் என்னென்ன கூத்துப் பண்ணிவிடுவேனோ என்று பயப்பட்டார்
போலும்.
"நாளைக்கு நம்ப சோசியர் கிருஷணனைப் போய் பார்க்கணும். அவரு நஷத்திரம் கணிச்சி முதல்
எழுத்து எடுத்துக் குடுப்பார். அப்புறம்தான் பேர்!" அம்மா கண்டிப்பாகச் சொன்னார். உண்மைதான்.
சோசியர் மிகவும் நவீனமான சோசியர். நஷத்திரம் எல்லாம் இஇப்போது கணிப்பது
கம்ப்யூட்டரில்தான். அப்பாயின்ட்மன்ட் வைத்துதான் போய்ப் பார்க்க முடியும். பேச்சு
விளக்கமெல்லாம் இஇங்கிலீஷில்தான்.
அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது போலிருந்தது.
முதல் தடவையாக தந்தையான எனக்கு இஇருந்த படபடப்பும் மகிழ்ச்சியும் அவருக்குச் சிரிப்பை
உண்டாக்கின போலும். அவர் என்னோடு மூன்று மக்களைப் பார்த்தவர். பேரன் பேர்த்தி கூட இஇதற்கு
முன் என் அண்ணன் மூலம் பார்த்தாகி விட்டது.
குழந்தையைக் கையில் ஏந்திய அனுபவம் மனசில் இஇன்னும் ஈரமாக இருந்தது. இஇது சந்ததியின்
தொடர்ச்சி. புதிய அத்தியாயம். நான் எழுதியிருக்கிறேன். என் அப்பாவின் தொடர்ச்சியாக. என்
பாட்டன் பூட்டனின் தொடர்ச்சியாக. ஆதி மனிதனின் தொடர்ச்சியாக. ஆதிக் குரங்கின்
தொடர்ச்சியாக. ஆதிகாலத்தில் விண்வெளிக் கதிரியக்கத்தில் கொதித்துக் கிடந்த விசக்
கூழிலிருந்து உருவான முதல் மரபணுக்களின் இஇடையறாத் தொடரின் ஒரு சங்கிலிக் கண்ணாக
இஇவள். 'ஆதி' என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்? இஇத்தனை சாதாரணமாக அடிபட்டுப்
போனதே!
திடீரென்று நினைவு வந்து அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்: "ஏன் அப்பா, குழந்தயத் தாத்தாவுக்குக்
கொண்டி காட்ட வேணாம்?"
"ஆமா கொண்டி காட்டத்தான் வேணும். பாக்க ஆசப் படுவாங்கதான். எதுக்கும் அம்மாவையும் உன்
பெண்டாட்டியையும் கேட்டுக்க!" என்றார்.
அப்பா ரொம்ப மாறிவிட்டார். அவருக்குள் இஇருந்த வெப்பம் முற்றாக வெளியேறி விட்டது. எதைக்
கேட்டாலும் "எதுக்கும் உங்க அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுக்க" என்பதே பாட்டாகப்
போய்விட்டது.
அப்பா ஒரு காலத்தில் வீறுடன் இஇருந்தார். பெரியார் இஇயக்கத்தில் இஇருந்து சாதிய எதிர்ப்புப்
போராட்டத்தில் இஇறங்கியிருக்கிறார். தமிழர் சங்கம் அமைத்து இஇந்தியர் என்ற மந்தைக்குள் தான்
அடங்கியவனில்லை என்று காட்டி இஇருக்கிறார். எங்களுக்கெல்லாம் பெயர் வைக்க நாள் நட்சத்திரம்
பார்க்கவில்லை.
அவருடைய அப்பா - என் தாத்தா- அவர் காலத்தில் சிங்கமாக இஇருந்தவர். ஐஎன்ஏயில்
இஇருந்திருக்கிறார். நேதாஜியுடன் பிடித்த படம் இஇன்னமும் வைத்திருக்கிறார். கொஞ்சமாகச்
செல்லரித்துப் போன கருப்பு வெள்ளைப் புகைப் படத்தில் மூன்றாவது வரிசையில் தொப்பியே பெரிது
ம் தெரியுமாறு நிற்பார். காந்தி இஇயக்கத்தில் இஇருந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக்
கைத்தடியினால் அடிவாங்கி இஇருக்கிறார்.
அவற்றாலெல்லாம் முறிக்க முடியாத என் முன்னோரின் தமிழ் ஆத்மாவை எங்கள் குடும்பம் ஏழைமை
நிலையிலிருந்து மத்திய தரப் பொருளாதார வர்க்கத்துக்கு எறிய பின், புதிய சமூகச் சூழ்நிலை
முறியடித்து விட்டது. போராட்டங்கள் இஇல்லாத சுகமான வாழ்கையில் நானும் என் சகோதரர்களும்
தின்பதும் திரிவதுமாக ஆடு மாடுகள் போல ஆகிவிட்டோம் என எனக்கு அடிக்கடி தோன்றும்.
சம்பாதிப்பதும் சந்தோஷிப்பதுமே எங்கள் வாழ்கையில் முதன்மை ஆகிவிட்டது போலத் தோன்றியது.
நானும் என் அண்ணனும் தங்கையும் புதிய மலேசிய நாடு வழங்கிய வாய்ப்புக்களைப் பயன் படுத்திக்
கொண்டு படிப்பில் உயர்ந்து விட்டோம். பட்டதாரிகளாக ஆகிப் பெரிய உத்தியோகங்கள்
பெற்றோம். அண்ணன் தேசிய இஇடை நிலைப் பள்ளியில் அறிவியில் பிரிவில் சேர்ந்து புதிய புதிய
மலாய் ஆங்கில அறிவியல் தொடர்களை வீட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்த போதே அப்பாவின்
ஆளுமை சரியத் தொடங்கிற்று. நானும் தங்கையும் தொடர்ந்து தேசியப் பள்ளிகளுக்குப் போக,
வீட்டுக்குள் எங்களுக்குள் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க அம்மாவும் விரைந்து ஆங்கிலம் கற்றுக்
கொண்டார். இஇலக்கணத்தை முற்றாகப் புறக்கணித்துக் கருத்தைப் புரிய வைப்பதையே
முதன்மையாகக் கொண்ட வேடிக்கை மொழி அவருடைய ஆங்கிலம். நாங்கள் சிரித்துக் கேலி
பண்ணினாலும் எங்களோடு சேர்ந்து சிரித்துக் கலந்து கொண்டார். அப்பாதான் அதில் கலந்து
கொள்ள முடியாமலும் விருப்பமில்லாமலும் தன்னைக் கொஞ்சம் தனிப் படுத்திக் கொண்டார்.
எங்கள் குடும்பம் அன்பான குடும்பம்தான். யாருக்கும் எந்தக் குறையும் இஇல்லை. அண்ணன் ஒரு
பொறியியலாளர். தங்கை ஒரு தேசிய ஆரம்பப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியை. வெவ்வேறு
ஊர்களில் குடும்பதோடு இஇருக்கிறார்கள்.
நான் ஒரு பொருளகத்தில் நிதித் துறை இஇயக்குனர். பெற்றோருடன் தங்கி விட்டேன். அப்பா என்னை
மட்டும் உடன் வைத்துக் கொண்டு தமிழும் பண்பாடும் சொல்லிக் கொடுத்தார். என்ன
காரணத்தாலோ எனக்கும் அதில் பிடிப்பு வந்தது. என் மேற்கல்வியோடு இஇவற்றையும் விடாமல் பற்றிக்
கொண்டேன்.
நன்கு படித்தவளும் கொம்ப்யூட்டர் கற்றவளுமான என் மனைவியும் குடும்பத்திற்கு
அணிகலனாகத்தான் வந்து சேர்ந்தாள். மாமனார் மாமியாரோடு ஒத்துப் போய்க் குடும்பம் நடத்தக்
கற்றுக் கொண்டாள்.
என்ன, ஒரு சராசரி மலேசிய இஇந்திய மத்திய தர வர்க்கக் குடும்ப மதிப்பீடுகளுக்கு குடும்பம் முற்றாக
மாறி விட்டது. வீட்டில் ஆங்கிலம் அதிகம் புழங்கிற்று. பொங்கல் கொண்டாடுவது போய் தீபாவளியே
முக்கிய பண்டிகை ஆயிற்று. அம்மா தீவிரமாகக் கோயிலுக்குப் போக ஆரம்பித்து விட்டார். சில
சாமியார்களின் அதி தீவிரப் பக்தை ஆனார்.
அம்மாவைப் பார்த்து வசந்தாவும் பல ஆரியப் பண்டிகைகளுக்கு விரதம் இஇருக்க ஆரம்பித்து விட்டாள்.
இஇப்போது ஒரு வர்த்தக நிறுவனம் வானொலியில் தீவிரமாக விளம்பரம் செய்து விற்றுவரும் ஓர்
அட்டைப் பெட்டியில் நவீனமாக அடைத்து விற்கும் சுலபத்தில் எந்த சிறிய அறையிலும் அடங்கி விடும்
ஹோம குண்டத்தை வாங்கி ஹோமமும் செய்து வருகிறாள். மாமியாரும் மருமகளும் ரொம்ப
ஒற்றுமை.
அப்பாவோ நானோ இஇதுபற்றி ஒன்றும் சொல்ல முடிவதில்லை. "ஆமா, இஇந்த வெடப்புதான்
உங்களுக்குத் தெரியும். யூ டோன்ட் அன்டர்.டேன்ட். இஇந்த குடும்பம் நாலு பேரு மதிக்கிற மாதிரி
இஇருக்குதுன்னா அது நாங்க கோயிலுக்கு போக வர இஇருக்கிறதினாலதான். குடும்பம் நல்லா
இஇருக்கிறது சாமி கும்பிட்றதுனாலதான், தெரிஞ்சிக்கிங்க!" என்று அம்மா தூக்கி எறிந்து விடுவார்.
எதிர்த்துப் பேசி அலுத்து விட்டோம், அப்பாவும் நானும். பெண்கள் ஏதாகிலும் சில நம்பிக்கைகளை
தீவிரமாகப் பற்றிக் கொண்டிருக்க ஆசைப் படுகிறார்கள். ஆரிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும்
எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அதன் இஇடத்தில் வேறு என்ன நம்பிக்கைகளை
சடங்குகளை வைப்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. சுற்றியுள்ள மத்திய தர வர்க்கம் தமிழ்,
திராவிட அடிப்படையிலிருந்து விலகி இந்துப் போர்வையில் உள்ள ஆரியச் சடங்குகளைப் பற்றிக்
கொண்டிருக்கும் போது அம்மாவும் மனைவியும் அந்த நீரோட்டதில் உற்சாகமாகத் தவழ்ந்து நீந்த
நானும் அப்பாவும் வேடிக்கை பார்ப்பவர்களாக ஆகிவிட்டோம். நாங்கள் இஇருவருமே ஆணாதிக்க
வாதிகள் இஇல்லை. அவர்களை அடக்கித் தடுக்க முடியவில்லை.
தாத்தா, பாட்டியை இஇழந்த பின் எங்களோடுதான் இஇருந்தார். ஆனால் வயதாகும் காலத்தில் தன்
நினைவுகள் தப்பித் தப்பிப் போய்த் தான் பிறருக்குத் தொல்லையாகி வருவதைத் தெரிந்து
கொண்டவுடன் தான் தனியாக இஇருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரே ஒரு நண்பர் மூலம்
ஒரு முதியோர் ஆசிரமத்தைக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்ந்து விட்டார். அப்பா வேண்டாம் என்று
தடுத்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டு விட்டார்.
இஇப்போது தாத்தா சுகமாகத்தான் இஇருகிறார். நினைவு மட்டும் போகும் வரும். அவர்
இஇருக்குமிடத்தில் அவரை இதரமாகவும் கனிவாகவும் கவனித்துக் கொண்டார்கள். அப்பாவும்
அவருக்கான எல்லாச் செலவுகளையும் கட்டிக் கையிலும் பணம் கொடுத்து வந்தார். அடிக்கடி போய்ப்
பார்ப்பதும் உண்டுதான். அம்மாவுக்கும் வசந்தாவுக்கும்தான் தாத்தாவைப் பிடிக்காது. கடந்த சில
ஆண்டுகளாகவே அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் முகங்களை மறந்து விட்டு "யாரு இந்தப் பொம்பிளைங்க?" என்று அவர் கேட்பது அவர்கள் இஇருவருக்கும் பெரும் அவமானமாக இருந்தது. இஇப்போது இஇவள். இஇப்போதைக்கு என் மனதில் 'ஆதி' தான். இஇன்னும் ஒரிரு நாட்களில் பேர் தெரிந்துவிடும். நல்ல குடும்பத்தில்தான் வந்து பிறந்திருக்கிறாள். அன்பாகவும் பண்பாகவும் வளர்க்கப் படுவாள்.
ஆனால் காலச் சுழல் இஇவளை எந்தக் கரைக்குக் கொண்டு சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும்!
ஆனால் அதெல்லாம் பின்னால். இஇப்போது அவளை அந்த முது கிழவருக்குக் காட்ட வேண்டும். "பார்
தாத்தா! உன் பூட்டப் பிள்ளை. உன் வம்சத்தின் புதிய தளிர். பார். கைகளில் ஏந்திக் கொள்!"
புஷ்பலதாவுக்கு - அப்படித்தான் சோசியர் பெயர் வைத்துக் கொடுத்திருந்தார் பூவைப் பனியினால்
போர்த்தது போல மெல்லிய பட்டில் ஒரு சட்டை வாங்கிப் போட்டிருந்தோம். 'புஷ்' என்றும் 'புஷ்ு'
என்றும் அவளைக் கூப்பிட்டோம். பால் வாசனையும் மூத்திர மல வாசனைகளும் அதன் பின்னர்
புஷ்சென்ற பவுடர் வாசனையுமாக எப்போதும் ஏதாவதொரு வாசனையுடனேயே இஇருந்தாள்.
மனைவியும் பெரும் பாலும் அதே வாசனைகளுடன்தான் இஇருந்தாள்.
அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டோம். அப்பா அப்படியாக முந்திக்
கொள்வதில்லை. மடியில் கொண்டு போட்டால் கொஞ்சுவார். எனக்கு வீட்டில் இஇருக்கும்
போதெல்லாம் அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும். "சும்மா சும்மா
தூக்காதிங்க! உடம்பு சூடு ரொம்ப ஆகாது" என்று வசந்தா என்னைக் கண்டிப்பாள்.
தாத்தாவுக்கு அவளைக் கொண்டு காட்ட வேண்டும் என்னும் ஆசை நிறை வேறாமல் இஇருந்தது.
அம்மாதான் தள்ளி வைத்தார். "இஇப்ப என்ன அவசரம்? பிள்ளைக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும்.
அப்புறம் காட்டலாம்" என்றார். "கெழம் இஇருக்கிற எடத்தில என்னென்ன நோய் நொடிங்க
இஇருக்கோ! பச்சை பிள்ளைக்குத் தொத்திக்கிச்சினா?" என்று மறைவில் அவர் பேசியதைக்
கேட்டேன்.
எனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இஇருந்தது. ஆனால் இஇத்தனை மில்லியன் ஆண்டுகளாக
மனித இஇனம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருப்பது இஇதை எல்லாம் வென்றுதானே என்ற
நம்பிக்கையும் இஇருந்தது. ஏதோ இஇந்தப் பிள்ளைதான் மிக அதிசயமான பிள்ளை என்பதுபோல் அம்மா
பேசுகிறார்.
ஆனால் தாத்தாவைப் பார்த்து புஷ்பலதா பிறந்திருக்கும் செய்தியைத் தெரிவித்தோம். தாத்தா
வெறுமை நிறைந்த கண்களுடன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு அப்பாவைப் பார்த்து "உனக்கு
பிள்ளை பிறந்திருக்கா?" என்று கேட்டார்.
"இஇல்லப்பா, இஇவனுக்கு, கதிரேசனுக்கு. முதல் பிள்ளை!" என்றார் அப்பா.
என்னைப் பார்த்து "எங்க பிள்ளை?" என்று கேட்டார்.
"வீட்டில இஇருக்கா தாத்தா!" என்றேன்.
"என்ன பிள்ளை?"
"பெண் பிள்ளை!"
தாத்தா கொஞ்சம் யோசித்தார். அப்புறம் "எனக்குக் காட்ட மாட்டியா?" என்றார்.
"காட்டுறேன் தாத்தா, கொஞ்ச நாள் போகட்டும்!" என்றேன்.
ஒரு மாதம் கழிந்தவுடன் தாத்தாவைக் கொண்டு வந்து காட்ட முடிவாயிற்று. "சுத்தமா சவரம்
செஞ்சிக்கிட்டு வரச்சொல்லுங்க!" என்று எச்சரிக்கை விடுத்துத்தான் அனுப்பினார் அம்மா.
தாத்தாவை அழைத்து வர நானும் அப்பாவும்தான் போனோம். எங்களைக் கண்டவுடன் "ஏன்
பிள்ளையைக் கொண்டு வந்து காட்டல?" என்று கேட்டார். அவருக்கு அந்த அளவுக்கு ஞாபகம்
இஇருந்தது மகிழ்ச்சியாக இஇருந்தது.
"இதோ உங்களைக் கொண்டு போகத்தான் வந்திருக்கோம் தாத்தா. வாங்க போய்ப் பார்க்கலாம்!"
என்றேன்.
தாத்தாவுக்கு சுத்தமாகச் சவரம் செய்துவிட்டு சலவை ஆடைகள் அணிவித்துக் காரில் ஏற்றிக்
கொண்டு வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் அவரைக் கைப்பிடியாக இஇறக்கிக் கொண்டு வந்தோம்.
அம்மா வாசலில் நின்று "வாங்க மாமா" என்று வரவேற்றார்.
"இஇது யாரு?" என்று தாத்தா கேட்டார்.
"உங்க மருமகள். தெரியிலியா?" என்று அப்பா சிரித்துக் கொண்டே சொல்லி அப்பாவை உட்கார
வைத்தார்.
அம்மாவுக்குக் கோபம் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்படித் தெரியவில்லை. தாத்தா வந்ததில்
அம்மா மகிழ்ந்தது போல்தான் காணப் பட்டார். முகத்தில் சிரிப்பு மாறாமல் இஇருந்ததில் அது
தெரிந்தது. "வசந்தா, கொழந்தயக் கொண்டாந்து மாமா மடியில போடும்மா! பெரியவங்க
ஆசிர்வதிக்கட்டும்" என்றார். எனக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இஇருந்தது.
வசந்தா குழந்தையை ஏந்தி வந்து தாத்தாவின் மடியில் போட்டாள். தாத்தா கைகளைக் கூட்டிக்
கொஞ்சம் அணைத்த படியே பிடித்துக் கொண்டார். நான் பக்கத்திலேயே உட்கார்ந்து குழந்தை
தவறி விடாமல் இஇருக்கப் பார்த்துக் கொண்டேன்.
புஷ்பலதா முஷ்டிகளை மடக்கிக் கொண்டு தாத்தாவின் முகத்தை வைத்த கண் வாங்காமல் முறைத்துப்
பார்த்தாள். தாத்தாவும் கொஞ்சமும் புன்னகை இஇல்லாத முகத்தோடு தன் தடித்த கண்ணாடிகள்
ஊடே அவளைத் திருப்பி முறைத்தது போல் இஇருந்தது.
"குழந்தய ஆசிர்வதிங்க தாத்தா!" என்றாள் வசந்தா.
"நல்லா இஇருக்கட்டும்!" என்றார். தனது விரல்களால் குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்தார்.
திரை விழுந்த தோல் சுருங்கிய ஜீவன் வற்றிய கருத்த விரல்கள் பச்சை ரத்தம் ஓடும் சிவந்த தளிர்
விரல்களைப் பற்றியிருந்தன. அந்த முரண்பாட்டின் பொருள் என்ன என்று நான் எனக்குள் தேடிக்
கொண்டிருந்தேன்.
புஷ்பலதா சட்டென்று முஷ்டியை விரித்துத் தாத்தாவின் ஒரு விரலைப் பற்றிக் கொண்டாள். தாத்தா
முதன் முறையாகப் புன்னகை செய்தார். புஷ்பலதா பதிலுக்குச் சிரித்தாள். எங்கள் எல்லார் உதடுகளும்
மீண்டும் ஒரு சிம்ஃபொனியின் வாத்தியங்கள் போல விரிந்தன.
"என் பாக்கியம், என் பாக்கியம்" என்றார் தாத்தா. என் குழந்தை தாத்தாவுக்குப் பெரிய பாக்கியமாகத்
தெரிவது எனக்குப் பெருமையாக இஇருந்தது.
"பாக்கியம்ங்கிறது எங்க அம்மா பேரு!" என்றார் அப்பா. எனக்கும் ஞாபகம் வந்து "ஓ" என்றேன்.
தாத்தா கொஞ்ச நேரம் இஇருந்து நாங்கள் வற்புறுத்தக் காப்பியும் இஇனிப்புப் பலகாரங்களும்
சாப்பிட்டார். ஒரு முறை வசந்தாவை உற்றுப் பார்த்தபோது அவளாக முந்திக் கொண்டு சொன்னாள்:
"யாருன்னு பாக்கிறிங்களா தாத்தா! நாந்தான் பிள்ளயப் பெத்தவ!"
"எனக்குத் தெரியும். பிள்ளைக்கு பாக்கியம்னு பேர் வை!" என்றார்.
வசந்தா கொஞ்சம் விழிக்க அம்மா சொல்லிக் கொடுத்தார்: "சரின்னு சொல்லு!" சும்மாதான்.
தாத்தாவைத் தமாஷ் பண்ண. புஷ்பலதா பாக்கியம் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த
விஷ்யம்தான்.
"சரி தாத்தா!" என்றாள் வசந்தா.
தாத்தாவை மீண்டும் கொண்டு அவரது அறையில் சேர்த்தோம். அப்பாவைப் பார்த்து "பிள்ளைக்குக்
கொடுக்கணும்னு ஒரு சாமான் எடுத்து வச்சேன். அப்ப கொண்டார மறந்து போச்சு. கொஞ்சம் இஇரு!"
என்று அலமாரிக்குள் சென்று துழாவித் தேடி ஒரு தடித்த கவர்க்கூட்டை எடுத்துக் கொடுத்தார்.
"என்ன அப்பா இஇது?" பிரித்துப் பார்த்த போது 100 வெள்ளி நோட்டுக்களாக ஆயிரக் கணக்கில்
பணம் இஇருந்தது.
"ஏது அப்பா இஇவ்வளவு பணம்? ஏன் குடுக்கிறீங்க?"
"நீ குடுத்த பணம்தான். சேத்து வச்சிருக்கேன். பிள்ளைக்குக் குடு! நல்லா வளத்து எடு!" என்றார்.
நான் சொன்னேன்: "வேணாம் தாத்தா! எங்கிட்ட பணம் இஇருக்கு! பிள்ளய வளத்து எடுக்க அது போது
ம்!" என்றேன்.
"போதுமா? எவ்வளவு பணம் போதும்?" என்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
"பரவாயில்லா தாத்தா. உங்க செலவுக்கு வச்சிக்கிங்க!" என்றேன்.
"எனக்கு என்ன செலவு? எல்லாந்தான் உங்க அப்பா கொடுக்கிறாரே! எனக்கு இஇனி செலவு இஇல்ல.
பாக்கியத்துக்குக் கொடு!" கடைசி வரை திரும்ப வாங்கிக் கொள்ளவில்லை.
வீடு வரும்போது அப்பா காரில் பேசாமல் வந்தார். நான் புஷ்பலதா அலையா. பாக்கியத்தின் பெரும்
பரிசை எண்ணி மகிழ்ந்தவாறு வந்து கொண்டிருந்தேன். அவளுக்கு இஇந்தப் பரிசின் மகிமை புரியுமா?
கையில் கொடுத்தால் ஆசையோடு வாங்கிக் கொள்வாளா? அல்லது கசக்கி வாயில் போட்டு
மெல்லுவாளா? குழந்தை 100 வெள்ளி நோட்டை வாயில் போட்டு மென்று எச்சில் படுத்துகிற
காட்சியைக் கற்பனை செய்துகொண்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
"இஇனி ரொம்ப நாளு இஇருக்க மாட்டாங்க!" என்றார் அப்பா.
"என்ன சொன்னிங்க அப்பா?"
"அப்பாவுக்கு அம்மாவோட நெனப்பு வந்திடிச்சி. இஇனி ரொம்ப நாளு இஇருக்க மாட்டாங்க!" என்றார்.
பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அமைதியாகக் காரோட்டினேன்.
நன்றி: மக்கள் ஓசை - 23 மார்ச் 2000 மலேசிய வார இஇதழ்
நன்றி: மதுரைத் திட்டம் pdf கோப்புகள்
|